Wednesday 3 September 2014

1900 Temple at Bukit Pilah Estate, Rompin, N.Sembilan

Om Namasivaya

Lord Veerabathirar at Kanni Kovil, Seremban

Om Namasivaya

“சிவனை வணங்கவே சிவன் அருள் வேண்டும்“ - Om Namasivaya

Om Namasivaya

Om Sanggili Karupparaya Namaha - Jalan Lama Bentong, Gombak

Om Namasivaya

Om Maruthuva Munnadiyar Namaha

Om Agora Veerabathraya Namaha - Om Sanggili Karupparaya Namaha

Friday 9 May 2014

Om Veerabathraya Nama - Om Sanggili Karupparaya Namaha


Om Munnadiyar Namaha


Agora Veerabathirar



அகோர வீரபத்திரர் சிவபெருமானது நெற்றிக் கண்ணில் இருந்து தோற்றுவிக்கப்பட்ட கடவுளாக கருதப்படுகிறார். வீரபத்திரருக்கு “வீரம்” என்பதற்கு “அழகு” என்றும், “பத்திரம்” என்பதற்கு “காப்பவன்” என்றும் பொருள் கொண்டு “வீரம் காக்கும் கடவுள்” என்கின்றனர். சிவபுராணம், மகாபாரதம், கந்த புராணம், திருச்செந்தூர்ப்
புராணம், வாயு புராணம் போன்ற புராணங்கள், வீரபத்திரர் சிவனிடமிருந்து எவ்வகையில் தோன்றியது என்பதை விளக்கியுள்ளன தமிழ்நாட்டிலுள்ள பல சிவன் கோயில்களில் வீரபத்திரர் வைக்கப்பட்டு வழிபடப்படுகிறார். தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, சென்னையிலுள்ள மயிலாப்பூர், தாராசுரம்,கும்பகோணம், திருக்கடவூர் போன்ற இடங்களில் வீரபத்திரர் கோயில்கள் உள்ளன.

“ஆளுடைத் தனி ஆதியை நீத்தொரு
வேள்வி முற்ற விரும்பிய தக்கனோர்
நீள் சிரத்தை நிலத்திடை வீட்டிய
வாள் படைத்த மதலையைப் போற்றுவாம்”



Om Namasivaya


Om Munnadiyar Namaha


Om Namasivaya


Agora Veerabathirar - Sanggili Karuppar



Thursday 8 May 2014

Om Sanggili Karupparaya Namaha

நடமாடும் தெய்வம்!

அருள்மிகு கருப்பசாமி - மகத்தான இந்தக் காவல் தெய்வத்தின் தோற்றம், வரலாறு, கோயில்கள் குறித்த தகவல்களுடன், இவருக்கும் சுவாமி ஐயப்பனுக்குமான வழிபாட்டுத் தொடர்புகளையும் விரிவாக விவரிக்கிறது, சுவாமி ஓங்காரனந்தர் எழுதிய, 2000 பக்கங்கள் கொண்ட 'அருள்மிகு கருப்பசாமி - ஒரு நடமாடும் தெய்வம்' எனும் நூல்.

'நம் தேசத்தைக் காத்து நிற்கும் இருபெரும் காவல் தெய்வங்கள் ஸ்ரீஆஞ்சநேயரும் ஸ்ரீகருப்பசாமியுமே' என்பன போன்ற விளக்ககங்களுடன், அபூர்வ பாடல்களை மேற்கோள்காட்டி, நூலாசிரியர் சுவாமி ஓங்காரனந்தர் ஆய்ந்து தரும் தகவல்கள், ஐயப்பமார்களுக்கு பெரிய வரப் பிரசாதம்! இனி நூலில் இருந்து சில தகவல்கள்...

'அருள்மிகு கருப்பசாமி எனும் கருப்பண்ணசாமி, மக்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் எல்லா ஊர்களுக்கும் காவல் தெய்வமாகத் திகழ்கிறார். அவரின் தோற்றம் பற்றிக் கூறுவது இதுவரை கேள்விப்பட்டிராத தகவல்களாக இருக்கக்கூடும்!

வால்மீகி, தர்ப்பையைக் கிள்ளிப்போட்டு அதற்கு உயிர் கொடுக்க, அதுவே கருப்பண்ண சாமியானது என்பது, ராமாயணத் தகவல். 'தர்ப்பையில் பிறந்த கருப்பசாமி' எனும் ஸ்ரீகருப்பசாமி குறித்த பாடல் வரி, இதற்குச் சான்று பகரும். ஸ்ரீவீரபத்திரருக்கும் சண்டிக்கும் பிறந்த குழ்ந்தை கருப்பசாமி என்றும் சொல்வார்கள்.

கருப்பன், கருப்பசாமி எனும் பெயர் கொண்ட மனிதர்களின் தலை வெட்டப்பட்டுப் புதைக்கப்பட்ட இடத்தில், கருப்பசாமி கோயில் ஏற்பட்டது என்றொரு ஆய்வுத் தகவலும் உண்டு.

நின்ற கோலம், அமர்ந்த கோலம், குதிரையின் மீதேறி புறப்படும் கோலம்... இப்படிப் பல்வேறு நிலைகளில் பல கோயில்களில் காட்சி தருகிறார் கருப்பசாமி. கம்பீர உருவம், தலைப்பாகை, இடையில் கச்சை, மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை மற்றும் கையில் அரிவாளுடன் கோயில் கொண்டிருப்பார். பெரும்பாலும் கையில் சுக்குமாந்தடியுடன் அவர் அருள்வதை தரிசிக்கலாம்.

கருப்பண்ணசாமிக்கு உகந்த படையல் பொருட்கள் - சர்க்கரைப் பொங்கல், அவல், பொரிகடலை, மாம்பழம், வாழை, பலா, கொய்யாப் பழம் மற்றும் இளநீர்.

கருப்பசாமி தியான ஸ்லோகம்:
த்விபுஜம் பீன க்ருஷ்ணாங்கம் பப்ருச்மச்ரு சிரோருஹம்;
கதாம் கட்கம்ச பிப்ராணம் மஹாகாலம் வயம் நும